×

கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்

 

கூடுவாஞ்சேரி: கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்து வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பூங்கா பராமரிப்பு பணிக்காக விடுமுறை விடுவது வழக்கம்.

ஆனால் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து பூங்காவை கண்டுகளிப்பதற்காக செவ்வாய்க்கிழமையான இன்று பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும். இவ்வாறு பூங்கா நிர்வாகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

The post கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Zoo ,Chennai ,Arinar Anna Zoo ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்